உலகளவில் பிரபலமான நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, ஆயிரம் போட்டிகளில் விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார்.
35 வயதான பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டதன் மூலம், தனது 1,000 வது அதிகாரப்பூர்வ போட்டியை பதிவு செய்துள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டிகளில், ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஸ்பேல் அணிக்கெதிரான போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம், 724 கோல்கள் அடித்த பெருமையினை பெற்றார்.
மேலும் இந்த போட்டியில், ஜுவென்டஸ் அணி 2-1 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் Serie A தொடரில், ஒரே ஆண்டில் 11 கோல்கள் அடித்து, கேப்ரியல் ஓமர் பாடிஸ்டுடா மற்றும் ஃபேபியோ குவாக்லியாரெல்லா ஆகியோருடன் தனது சாதனை பகிர்ந்துகொண்டார்.