‘அரசியல் ஒரு சாக்கடை’ என்று கூறுவார்கள். ஆனால் தமிழ் தேசிய அரசியல் இந்த அளவிற்று சாக்கடையாக மாறும் என்றும் யாருமே நினைக்கவில்லை.
அதுவும் ஒரு சிறந்த கல்விமான் என்று தமிழ் மக்களால் பார்க்கப்பட்டுவந்த சுமந்திரனால், தமிழ் தேசிய அரசியல் ஒரு துர்நாற்றமடிக்கும் சாக்கடையாக மாற்றப்படும் என்று தமிழ் மக்கள் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராக தனது நெருங்கிய நன்பியான நளினி ரெட்ணராஜா என்ற பெண்ணை களமிறக்கியுள்ளார் சுமந்திரன். நேற்று கொழும்பில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவு கூட்டத்தில் கிழக்கைச் சேர்ந்த கூட்டமைப்பு பிரமுகர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சுமந்திரன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
நளினி ரெட்ணராஜா என்ற பெண் மட்டக்களப்பில் பிறந்திருந்தாலும், அவர் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கி வாழ்ந்துள்ளதுடன் மட்டக்களப்பு மக்களின் எந்த ஒரு போராட்டத்திலோ அல்லது உரிமை சார் நடவடிக்கையிலோ ஒருபோதும் பங்குபற்றவில்லை என்று குற்றம் சுமத்துகின்றார்கள் தமிழரசுக்கட்சி பிரமுகர்கள். தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசபடையினர் மிக மோசமான அடாவடித்தனங்களை கட்டவிழ்த்துவிட்டிருந்த காலங்களில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தர்வர்தான் இந்த நளினி ரெட்ணராஜா என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
அதுமட்டுமல்லாது தனிமனித ஒழுக்கம் தொடர்பாக பலவிதமான குற்றச்சாட்டுக்களுடன் வலம்வரும் நளினி ரெட்ணராஜாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற ஒரு தளத்தில் களமிறக்குவது என்பது, மட்டக்களப்பு தமிழ் மக்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தையே கேலிசெய்யும் ஒரு நடவடிக்கை என்று குறிப்பிடுகின்றார் முன்நாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
நாளாந்தம் இரவில் குடிபோதையில் திளைக்கும் இந்தப் பெண்ணின் ஒழுக்கக்கேடுகள் பற்றி பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
மனோ கணேசன் உடன் இணைத்து அவரது கட்சி உறுப்பினர்களால் பேசப்பட்ட ஒருவர்தான் இந்த நளினி ரெட்ணராஜா. மனோகணேசன் மூலம் வேலைவாய்ப்புக்கள் பெற்றுத் தருகிறேன் என்று பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது.
அதேபோன்று ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறுகின்ற காலங்களில் அங்கு சுமந்திரனுடன் மிக நெருக்கமாக நளினி ரெட்ணராஜா திரிந்ததை, அங்கு வருகைதரும் அனைத்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுமே நன்கு அறிவார்கள்.
மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற இவரது தாயாரின் படுகொலையுடன் இந்த நளினி சம்பந்தப்பட்டதாக அவரது உறவினர்களாலேயே குற்றம்சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைவிட, 2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் வாக்குளைச் சிதறடிக்க, தற்பொழுது கருணாவின் காரியதரியாக இருக்கும் கமலதாஸ் என்பவருடன் இணைந்து மகிந்த அரசால் களமிறக்கப்பட்டவர்தான் இந்த நளினி ரெட்ணராஜா.
இப்படிப்பட்ட ஒருவரை தனது நெருங்கிய நன்பி என்ற ஒரே காரணத்திற்காக த.தே.கூட்டமைப்பு சார்பாக களமிறக்குவது சுமந்திரனின் எதேச்சாதிகாரத்தையே காட்டுவதாக குற்றம்சுமத்துகின்றார்கள் த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள்.
இவை அனைத்தையும்விட, நளினியை ஏன் இத்தனை எதிர்ப்புகளின் மத்தியிலும் களமிறக்குகின்றீர்கள் என்று தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சுமந்திரன் வழங்கிய பதில்தான் சுமந்திரனின் பிற்போக்குத்தனமான எண்ணத்தை வெளிக்காண்பிப்பதாக இருக்கின்றது.
‘நளினி ஒரு கிறிஸ்தவ பெண். இந்துவாக இருந்து மதம்மாறியவர். எனவே மட்டக்களப்பில் கிறிஸ்தவர்களாக மதம்மாறியவர்களின் வாக்குகளை கைப்பற்ற நளினி ரெட்ணராஜாவை களமிறக்குவது உசிதம்’ என்று கூறியிருக்கின்றார் சுமந்திரன்.
தமிழ் தேசிய அரசியலை சாக்கடையாக மாற்றுவதற்கு ஒரு ‘சாக்கடையையே’ களமிறக்கும் சுமந்திரனின் முயற்சியை மிகவும் கடுமையாக கண்டிக்கின்றார்கள் மட்டக்களப்பு த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்கள்.
இவர் வேட்பாளராக போட்டி இட விண்ணப்பம் கொடுக்காத நோர்முக தேர்வில் கலந்து கொள்ளாதவர் சுமந்திரனின் ஆதிக்கத்தால் வேட்பாளர் பட்டியலில் இவரை சுமந்திரனைத் தவிர யாருக்கும் தெரியாது.