• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

இனி இத்தாலியில் கொரோனா மெல்லச் சாகும்! மகிழ்ச்சியான செய்தி!!

Editor by Editor
March 24, 2020
in உலகச் செய்திகள்
0
இனி இத்தாலியில் கொரோனா மெல்லச் சாகும்!  மகிழ்ச்சியான  செய்தி!!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

நாம் எல்லோரும் மகிழ்வுடன் வரவேற்கும் செய்தி இது. வெறும் நம்பிக்கையை ஊட்டும் செய்தி மட்டும் அல்ல இது. ஒரு வரலாற்றுப் போக்கின் அவதானிப்பில் இருந்து உருவான செய்தியாகும். மனித குலத்தின் இருப்பிற்கும், மேம்பாட்டிற்கும் இது அவசியமானதும் கூட. இது போன்ற ஒரு செய்தியை 2014ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நாம் உலகிற்கு சொல்லி இருந்தோம் என சமூக ஆர்வலர் சிவா முருகைப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஆம் அந்த விஞ்ஞான பூர்வமான செய்தி உண்மை ஆக்கப்பட்டதே வரலாறு. அன்று மேற்று ஆபிரிக்க நாடுகள் எபோலா என்ற உயிர் கொல்லி நோயால் பீடிக்கப்பட்டு உலக சுகாதார நிறுவனங்கள், பல வளர்ச்சியடைந்த நாடுகளின் மருத்துவக் குழுக்களினால், செயற்பாடுகளினால் கட்டிற்குள் கொண்டு வர முடியாமல் தினம் தினம் மரணங்களை தமதாக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தன மேற்று ஆபிரிக்க வறிய நாடுகள்.

இந்நிலையில் கியூபா இன் 460 பேர்களைக் கொண்டு மருத்துவக்குழுவுடன் தனது சேவையிற்காக மேற்கு ஆபிரிக்க நாட்டில் கால் பதித்தது. சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பதால் தள்ளி வைக்கப்பட்ட இந்த நாட்டை எபோலாவின் நோய் பரவலின் உச்சத்தின் பின்னே சர்வ தேச சமூகம் அங்கு செல்ல அனுமதித்தது.


இந்த தடைத் தாமதத்தை, தவிர்ப்பை அவமதிப்பை கியூப மனிதானிமானம் ஒரு பொருட்டாக கருதாமல் மனித குலத்தை காப்பதே தனது மருத்துவக் கண்டு பிடிப்பின் ஒரே நோக்கம் என்று திடசங்கற்பம் பூண்டு தன்னை தடை செய்த நாட்டின் மக்களாக இருந்தாலும் பறவாய் இல்லை என்று ஒரு உன்னத நோக்குடன் செயற்பட வைத்தது.

மிக எளிமையாக ஆர்பாட்டம் அல்லாமல் மேற்கு ஐரோப்பாவில் தரையிறங்கி (புகைப்படம் 2) தனது பணிகளை ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தில் தமது உயிர்களைக் கூடப் பொருட்படுத்தாமல் எபோலா உயிர் கொல்லிப் பரவலைக் கட்டிற்குள் கொண்டு வந்து விட்டு பிரதி உபகாரம் பாராமல் தனது நாட்டிற்கு திரும்புவதற்கான தலமையை கொடுத்தது அன்று எம்முடன் வாழ்ந்த கியூப அதிபர் பிடல் காஸ்ரோ.

இன்று அவர் காட்டிய வழியில் அந்நாட்டு அரசியல் தலமையின் பணிப்பின் பேரில் 2020 மார்ச் 22 ம் திகதி இத்தாலியில் தமது 52 மருத்துவ நிபுணர்களுடன் களம் இறங்கியுள்ளது(புகைப்படம் 1). இத்தாலியில் கொரனாவின் தாக்கம் தீவிரம் அடைந்த போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கப்பட்ட உதவிகள் மறுக்கப்பட அதனை நிறைவேற்றி வைத்தது சீனா சில தினங்களுக்கு முன்பு.

நேற்றை தினம் ரஷ்யா தனது உதவிகளை தரை வழியாக அனுப்பியுள்ளது. தற்போது இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் கியூபா தனது மருத்துவக் குழுவுடன் தனது மனிதாபிமான செயற்பாட்டிற்காக தரையிறங்கி இருக்கின்றது.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் பரவி இருந்தாலும் இந்தாலியில் ஏற்பட்டிற்கும் பரவலே மனிதகுலத்தை நடுங்க வைத்திருக்கின்றது. இத்தாலியின் கட்டுப்பாடற்ற ஆரம்ப செயற்பாடுகள், இந்த நோய்ப் பரவலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வயதில் மூத்தவர்கள் என்பதினால் மரணம் அதிகம் என்றும் தகவல்கள் கூறி நிற்கின்றன.

இந்த அகோரத் தாக்கம் தினமும் குறைந்த பாடில்லாமல் இருப்பது இதனைக் கட்டுப்படுத்த முடியுமா….? என்ற கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் கியூப மருத்துக் குழுவின் களம் இறங்கிய செயற்பாடுகளானது 2010 டிசம்பரில் கெயிட்டியில் கொலராவை கட்டிற்குள் கொண்டு வந்தது, 2014 டிசம்பரில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் எபோலாவை கட்டிற்குள் கொண்டு வந்தது போன்ற வரலாற்று செய்திகள் இங்கு இத்தாலியிலும் எங்கள் கியூபா மனித குலத்தை காப்பாற்றும் என்ற நம்பிக்கை வலுவாக்கி நிற்கின்றது.

எனவேதான் சொல்கின்றோம் ‘கொரோனா இனி மெல்லச் சாகும்…..!” என்று.

சீனாவில் முதலில் அறியப்பட்டு அடங்காது என பலராலும் பேசப்பட்ட இடத்தில் சீன அரசின் துரிந்த செயற்பாடும் இதற்கு எந்த அளவிலும் குறைவில்லாத கியூப மருத்துக்வக் குழுவின் செயற்பாடும்தான் அங்கு இதனைக் கட்டிற்குள் கொண்டு வந்தது என்பதை முதலில் உலக மக்களுக்கு உரத்துக் கூறியது சீனாதான் கியூபா அல்ல. கியூபா தன்னடக்கத்துடனேயே என்றும் போல் இருந்தது.

உலகம் உடனே இதனைத் திரும்பிப் பார்க்கவில்லை. பிரதான ஊடகங்களும் இந்த வரலாற்றை மறைக்கவே முற்பட்டன. ஏன் இன்றும் முயலுகின்றன. ஆனால் கொரோனாவின் கோர நிலமைகளை உலகின் மூலை முடுக்கெல்லாம் விபரீத எல்லைகளை தொடுவது போல் நகரும் போது இச்செய்தி பிரதான செய்தியாக மனிதாபிமானம் மிக்கவர்களால் சமான்ய பொது மக்களால் பார்க்கப்பட்டது…. நம்பப்படுகின்றது பரப்பப்படுகின்றது.

இதனாலேயே இன்று அது இத்தாலியிற்கு கியூப மருத்துவக் குழுவை உலகம் அனுமதித்தது…. அழைத்தது. இது கியூபாவின் மனிதாபிமானத்தை மருத்துவ நிபுணத்துவத்தை மனித குலத்திற்கு தொடர இன்னொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.

இதற்கு வலு சேர்த்ததாக அமைந்த அண்மைய விடயத்தையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும். பிரித்தானிய பிரஜைகள் நிரம்பிய உல்லாசப் கப்பலை கொரனாவின் தாக்கத்திற்குள்ளான காரணத்தால் நடுக்கடலில் தத்தளிக்க விட்டது சர்வதேச சமூகம். ஆனால் கியூபா இந்த பயணிகளுடனாக கப்பலை தானாக சுயமாக தனது தரையிற்கு இரு கரம் நீட்டி அரவணைத்து இறங்குமிடம்(புகைப்படம் 4) வழங்கியது. பின்பு தங்குமிடமும்… சிகிச்சையும்… வாழ்வைவும் தற்போது அளித்து வருகின்றது.

இந்த மனித நேய செயற்பாடு கியூபாவை யாரும் நிராகரிக்க முடியாத நிலையில் உயரத்திற்கு கொண்டு சென்று விட்டது. இதனையும் மீறி கியூபாவை நிராகரிப்பவன் மனிதனும் இல்லை……! மனித குல இருப்பிற்கு ஆதரவானவனும் இல்லை. இங்கு மனிதநேயமே மனிதத்தை வென்றுள்ளது. இச்சம்பவமும் கியூபாவை அங்கீகரித்து ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்றாக இந்தாலியில் செயற்படுவதற்கான காரணமாகி நிற்கின்றது.

தற்போது முடியாது…. நிறுத்தவே முடியாது…. இந்தக் கொரோனாப் பரவலை …மரணத்தை…. என்ற நிலையில் தனது புள்ளி விபரத்தைக் காட்டிநின்ற இத்தாலியில் இந்தாலிய மக்களை கியூப மருத்துவக் குழு கெயிட்டியில்(புகைப்படம் 3) சாதித்ததை போல்….. மேற்கு ஐரோப்பில் சாதித்ததை போல்….. இனிவரும் நாட்களில் இந்தாலியில் அது சாதிக்கும். இது மனித குலத்தின் விஞ்ஞானபூர்வமான நம்பிக்கை. உண்மையாகும் நம்பிக்கை.

இனி இத்தாலியில் கொரான மெல்லச் சாகும்…. அது உலகம் முழுவதும் கொரனாவை மெல்லச் சாவதை ஆரம்பித்து வைக்கும்.

ஆனால் கியூபாவின் அருகில் உள்ள அமெரிக்கா மட்டும் இந்த மனித நேயத்தை வரவேற்க தயங்கி ஈகோவிடம் சிக்கித் தவிக்கும் ஆனாலும் கியூபா அமெரிக்க மக்களுக்கும் தனது மனித நேய மருத்துவத்திற்கு தயார் நிலையில்தான் எப்போதும் இருக்கும்.

Previous Post

வீடு திரும்பினார்….. முதல் கொரோனா நோயாளி!

Next Post

சீனாவின் வுகான் போல வீதிகளில் இறந்து கிடக்கும் இத்தாலியர்கள்

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
சீனாவின் வுகான் போல வீதிகளில் இறந்து கிடக்கும் இத்தாலியர்கள்

சீனாவின் வுகான் போல வீதிகளில் இறந்து கிடக்கும் இத்தாலியர்கள்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025

Recent News

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy