கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவில் உயிரிழந்தவர்களில் 95 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் என்ற தகவலை உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் துவங்கிய இந்த கொரோனா வைரஸ், இப்போது ஐரோப்பிய நாடுகளான, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.
இங்கு சில குறிப்பிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை உலகசுகாதார அமைப்பு, ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களில் 95 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள். கொரோனா வைரஸ் வயதானவர்களுக்கு மட்டும்தான் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பது தவறு.
மேலும் 50 வயதுக்குட்டபட்ட 10 சதவீதம் முதல் 15 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸால் மிதமான பாதிப்பு ஏற்படுகிறது.
ஐரோப்பாவில் சமீபத்திய தகவலின்படி 30,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.