இரத்தினபுரி நகரப்பகுதியிலிருந்து 67 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடரும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பொலிஸ் பிரிவுகளின் ஊடான போக்குவரத்தும் முற்றாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று (09) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு இன்றைய தினம் பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரத்தினபுரி நகரப்பகுதியிலிருந்து 67 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.