அமெரிக்காவில் நபர் ஒருவர் கொரோனா வைரஸிற்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடி வரும் செவிலியர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று தன்னுடைய சேமிப்பு பணத்தை அவர்களுக்காக செலவு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான், இங்கு தற்போது வரை 450,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 15,878 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.
இந்நிலையில், Michigan-ன் Detroit Medical Center-க்கு அருகில் இருக்கும் Exxon கேஸ் நிலையத்தில், Allen Marshall என்ற நபர் கையில் ஒரு பாதகையுடன், அதில் செவிலியர்களுக்கு கேஸ் இலவசம் என்று எழுதிய வாசகத்துடன் பிடித்த படி புதன் மற்றும் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, அதன் பின் இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Allen Marshall தான் சேமித்து வைத்திருந்த 900 டொலரை வைத்து செவிலியர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் நினைத்துள்ளார்.
ஏனெனில் இந்த கொரோனா வைரஸிற்கு எதிராக முன் வரிசையில் நின்று அவர்கள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக, நான் அவர்களை நேசிக்கிறேன், அதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி நின்றுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் Michigan-ம் ஒன்று என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இங்கு 10,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 417 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர் நின்ற புதன் மற்றும் வியாழக்கிழமை காலை 50 முதல் 80 பேர் வரை காருக்கு தேவையான கேஸை நிரப்பி சென்றதாக கூறியுள்ளார்.
மேலும் தன்னிடம் இருக்கும் பணம் முடிந்தவுடன், அவர் உங்கள் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்த வாசகத்தை பிடித்து நின்றார்.