• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

கொரோனா குறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும்… பெரும் ஆபத்தில் மக்களை சிக்க வைத்த ட்ரம்ப்…

Editor by Editor
April 13, 2020
in உலகச் செய்திகள்
0
கொரோனா குறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும்… பெரும் ஆபத்தில் மக்களை சிக்க வைத்த ட்ரம்ப்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவை நடுநடுங்கச் செய்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த ஆபத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்நாட்டு உளவுத்துறையும், சுகாதாரத்துறையும் பலமுறை எச்சரித்தும், அதைப் பொருட்டாக மதிக்காமல் பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செயல்பட்டுள்ளார் என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மையம் கொண்டு சூறாவளியாகச் சுழன்று அடித்து வருகிறது. கொரோனா வந்தால் பார்த்துக்கொள்ளலாம், நாங்கள் வல்லரசு, எதற்கும் தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் ட்ரம்ப் வீர வசனம் பேசினார்.

ஆனால், கொரோனாவில் தற்போது மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதைப் பார்க்கும்போது, அதற்கு சீனாதான் காரணம் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

தங்களின் இயலாமையால் சீனாவின் மீது கோபத்தை திருப்பிய ட்ரம்ப், கொரோனாவை சீனா வைரஸ் என்று கூறி தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார். அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகமாகி கட்டுக்கடங்காமல் போகவே, உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டினார். சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படும் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் மிரட்டினார்.

கொரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மாத்திரையாக இருக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா ஏற்றுமதி செய்ய அனுமதி மறுத்தால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். ட்ரம்ப்பின் இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் அவரின் இயலாமையால் வெளிவந்தவை எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் வெளியாகும் புகழ்பெற்ற த நியூயோர்க் டைம்ஸ் நாளேடு அமெரிக்காவின் இந்த மோசமான நிலைக்கான காரணத்தைப் புலனாய்வு செய்து ட்ரம்ப்பின் அலட்சியப் போக்கை மிகப்பெரிய செய்தியாக வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச ஊடகம் ஒன்றில் நாளேட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:

”கடந்த ஜனவரி மாதமே சீனாவின் வூஹானில் பேரழிவை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க உளவுத்துறையும், தேசிய பாதுகாப்பு அதிகாரிகளும், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயாக மாறக்கூடும். அதற்கு அமெரிக்கா முன்கூட்டிேய தயாராக வேண்டும் என எச்சரிக்கை விட்டு, விளைவுகளையும் தெரிவித்ததை ட்ரம்ப் அலட்சியப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் அலட்சியத்தில் உலகிலேயே மிக அதிகமான உயிரிழப்புகளை கொரோனவால் சந்திக்கும் நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு மோசமான சூழலை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் உளவுத்துறையும், சுகாதாரத்துறையும் விடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் இருந்ததாலும், சரியான தி்ட்டமிடல் இல்லாமல் இருந்ததாலும், ஜனாதிபதி ட்ரம்ப் அவரின் சொந்த உள்ளுணர்வு மீது இருந்த நம்பிக்கை போன்றவை அமெரிக்காவை அழிவில் தள்ளியுள்ளது என நாளேடு தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்கள், அமைச்சரவையின் ஆலோசகர்கள், உளவுத்துறை மூத்த அதிகாரிகள் ஏராளமான முறை ஆலோசனைக் கூட்டங்களில் கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், ஒவ்வொரு முறையும் ட்ரம்ப் மிகவும் அலட்சியமாகவும், மெதுவாகவும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

வர்த்தக ரீதியாக சீனாவை எவ்வாறு கையாள்வது, அதிகாரிகளின் உள்நோக்கம் இவற்றைப் பற்றி மட்டுமே ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து சிந்தித்துள்ளார்.

ஆனால், கொரோனா வைரஸின் ஆபத்து பற்றி அதிக அக்கறை கொள்ளாமல் நாட்டை பெரும் துயரில் விட்டுவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் குறித்து முறைப்படியான எச்சரிக்கைகள் அமெரிக்க தேசிய உள்துறை அமைச்சகத்துக்கு வந்துள்ளன.

தேசிய தொற்றுநோய்த் தடுப்பு வல்லுநர்களும் கொரோனா வைரஸின் தீவிரத்தையும் ஆபத்தையும் எச்சரித்துள்ளனர், தேசிய மருத்துவப் புலனாய்வுப் பிரிவு, இராணுவ உளவுத்துறை அனைத்தும் கொரோனா வைரஸின் ஆபத்து குறித்து ஒரே மாதிரியான எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளன.

ஜனவரி மாதத்துக்குப் பின் கொரோனா வைரஸ் தீவிரமடைந்தவுடன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் பயோ-டிபென்ஸ் பிரிவினர் துரிதமாகச் செயல்பட்டு அமெரிக்காவின் எல்லைகள் முழுவதையும் சீல் வைக்க அறிவுறுத்தினர்.

மக்களை வீட்டில் இருந்தே பணிபுரியவும் அறிவுறுத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் எதற்குமே ட்ரம்ப் செவி கொடுக்கவில்லை என அந்த நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஜனாதிபதி ட்ரம்ப்பின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான பீட்டர் நவாரோ ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் மிகப்பெரிய பேரழிவு அமெரிக்காவுக்கு ஏற்படலாம்.

5 இலட்சம் மக்கள் மடிவார்கள். இலட்சக்கணக்கான கோடி டொலர்கள் பொருளாதார இழப்பு நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்காவில் வாழும் 30 சதவீத மக்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்தை விடுத்திருந்தார்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த ஜனாதிபதி ட்ரம்ப் அப்படி ஒரு எச்சரிக்கைக் கடிதம் பீட்டரிடம் இருந்து வரவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால், பீட்டர் நவோரோ எழுதிய கடிதம் குறித்து அவரின் உதவியாளர்கள் ட்ரம்ப்பிடம் கூறியபோது, அவர் அதிருப்தி அடைந்து எதற்காக நவோரா தனது கருத்துகளைக் கடிதத்தில் எழுதினார் எனக் கடிந்துள்ளார் என்று நியூயோர்க் டைம்ஸ் நாளேடு நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 3 வாரங்களையும் அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளவி்ல்லை என்று அந்த நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.

ட்ரம்ப்பிடம், சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரிகள் , மிகவும் தீவிரமாகவும், வேகமாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் என பெப்ரவரி மாதத்தின் 3வது வாரத்தில் எச்சரிக்கை செய்தனர்.

குறிப்பாக சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வலியுறுத்தி, வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வைக்கலாம், பாடசாலைகள், பல்கலைகழகங்களை மூடிவிடலாம் என்று உச்சகட்ட எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால், அப்போதும் ட்ரம்ப் மிகவும் அலட்சியப் போக்கோடு இருந்துள்ளார்.

ஆனால், இந்த எச்சரிக்கை அளிக்கப்பட்டு 3 வாரங்களுக்குப் பின் ஜனாதிபதி ட்ரம்ப் அதிதீவிரமாக அமெரிக்காவில் சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்ற மக்களிடம் கேட்டுக் கொண்டார். அந்த நேரத்தில் அமெரிக்காவின் பெரும்பகுதியில் கொரோனா காலூன்றிப் பரவிவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நிலவும் சூழல்களால் எவ்வாறு மக்களுக்கு பதில் அளிப்பது என்பதில் வெள்ளை மாளிகை பிளவுபட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பிளவுபட்ட கருத்துகளால் ட்ரம்ப் சூழப்பட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக தீவிரமான நடவடிக்கைகளை தவிர்த்தது நியாயமானது அல்ல என்பது புரியத்தொடங்கியுள்ளது.

இவ்வாறு நியூயோர்க் டைம்ஸ் நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது.

Previous Post

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் போராளி பரிதாப மரணம்!

Next Post

பொலனறுவ பகுதியில் கத்தியை காட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்! பொலிஸார் தீவிர விசாரணை…..

Editor

Editor

Related Posts

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!
உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
Next Post
பொலனறுவ பகுதியில் கத்தியை காட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்! பொலிஸார் தீவிர விசாரணை…..

பொலனறுவ பகுதியில் கத்தியை காட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்! பொலிஸார் தீவிர விசாரணை.....

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025

Recent News

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy