செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பொது மக்களுக்கு கிடைக்கக்கூடும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் விரைவில் தொடங்கும் என்றும், உற்பத்தி செயல்முறைகள் விரைவாக இயக்கப்பட வேண்டும் என்றும்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பேராசிரிய சாரா கில்பர்ட் கூறினார்.
நாம் அதிக அளவு தடுப்பூசி தயாரிக்கத் தொடங்க வேண்டும், நிறுவனங்கள் புதிய தடுப்பூசியைத் தயாரிப்பதைத் தொடங்குவது வழக்கத்திற்கு மாறானது அல்ல, அது செயல்படும் என்று உறுதியாகத் தெரியும் என்று அவர் கூறினார்.
விரைவில் நாம் விரைவாகத் தொடங்குவோம், பில்லியன் டோஸ் அளவிற்கு தயாரிக்கப்போகிறோம்.
அநேகமாக பில்லியன் டோஸ்களை இந்த ஆண்டு தயாரிக்க முடியாது, ஆனால் நாம் தாயரிக்க தொடங்கவில்லை என்றால் அடுத்த வருடம் பில்லியன் டோஸ்களை தயாரிக்கபோவதில்லை என தெரிவித்துள்ளார்.