பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட அந்நாட்டு இராணுவத்திற்கு சொந்தமான விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் குஜராத் பிராந்தியத்திற்கு அருகே இராணுவ விமான விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்திற்கு செந்தமான முஷாக் விமானம் வழக்கமான பயிற்சிப் பணியின் போது குஜராத் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானிகள், மேஜர் உமர் (பயிற்றுவிப்பாளர் பைலட்) மற்றும் லெப்டினன்ட் பைசன் (மாணவர் விமானி) இருவரும் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான விமானம் MFI-17 முஷாக், பாகிஸ்தான் ஏரோநாட்டிகல் காம்ப்ளக்ஸ் (பிஏசி) வடிவமைத்து உருவாக்கிய ஒற்றை இயந்திர பயிற்சி விமானமாகும்.
#BreakingNews A #Pakistan Army aircraft- #Mushaq– crashed on Monday near #Gujarat during a routine training mission.
Both pilots, Major Umer (instructor pilot) and Lieutenant Faizan (student pilot) lost their lives in the crash. pic.twitter.com/EPg6tkHTuH— SindhLeaks |سنڌليڪس (@Sindhleak) April 13, 2020
இஸ்லாமாபாத்தில் ‘பாகிஸ்தான் தின’ அணிவகுப்புக்கு ஒத்திகை பார்க்கும் போது மார்ச் 11 அன்று ஒரு எஃப் -16 விபத்துக்குள்ளானது நினைவுக்கூரத்தக்கது.
இந்த ஆண்டு நாட்டின் விமானப்படைக்கு இது நான்காவது பெரிய விபத்து மற்றும் ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது விபத்து ஆகும்