தமிழகத்தில் 16 வயது சிறுமியை மிரட்டி 40 வயது நபர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் தணிகாசலம் (40). இவர் அங்கிருக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இதே தொழிற்சாலையில், ராணிப்பேட்டையை அடுத்த நரசிங்கபுரம் பைரவா காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது தணிகாசலம், இந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பல முறை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அப்போது தணிகாசலம் இதை நீ யாரிடம் சொல்லக் கூடாது என்று மிரட்டி வந்துள்ளார்.
ஆனால், மகளின் உடலில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர் என்ன என்று விசாரித்த போது, சிறுமி வயிற்றில் கட்டி உள்ளது, அது வளர்கிறது என்று பொய் சொல்லியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சோதனை செய்து பார்த்த போது, கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுமி நடந்தவற்றை கண்ணீருடன் பெற்றோரிடம் கூற, பெற்றோர் உடனடியாக இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் புகார் அளித்துள்ளனர்.
அதன் பின், தணிகாசலத்தைப் பிடித்து விசாரணை நடத்திய போது, சிறுமியைத் தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டதால், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.