ரேணிகுண்டா, பில்லா 2 போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகர் தீப்பெட்டி கணேசன்.
தற்போது உலகம் எங்கும் கொரோனா நோய் தாக்கத்தினால் படப்பிடிப்புகள் ரத்து செய்துள்ளதுடன், சினிமாவில் தினக்கூலியை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பில்லா 2 படத்தில் நடித்த தீப்பட்டி கணேசன் கண்ணீர் மல்க தான் படும் கஷ்டத்தினைக் கூறியுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பில் காலில் குத்திய முள்ளால் கடும் அவஸ்தைப்பட்ட இவர், ஒரு கட்டத்தில் நடக்கமுடியாத நிலைக்கு சென்றுள்ளார். அதன்பின்பு சிகிச்சை எடுத்து தற்போது மெதுவாக நடந்த நிலையில், சமீபத்திலும் மீண்டும் நடக்கமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அப்பொழுது தனக்கு உதவி செய்த மருத்துவர் முதல் தற்போது தனக்கு உதவி செய்துவரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து, நடிகர் தனக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் கையெடுத்து கும்பிட்டு கண்ணீருடன் தனது கோரிக்கையை வைத்துள்ளார்.



















