யாழ்ப்பாணத்தில் விசா முடிவடைந்த நிலையில், தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறிகட்டுவான் பகுதியில் வைத்து, கடற்படையினரால் நேற்றையதினம் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜைகள், நெடுந்தீவு பகுதியில் தங்கி இருந்து பணி புரிந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கைதானவர்களை, ஊர்காவற்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுள்ளது.