முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 5 வயது சிறுமி மீது தந்தை சரமாரியாக கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 08 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து குறித்த தந்தை தனது மகள்மீது கத்தியால் வெட்டியுள்ளார்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபரை முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.



















