மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்வண்டி மட்டு பிள்ளையாரடி ஆலயத்தில் நிறுத்தி தரிசித்தபோது பஸ்வண்டியின் முகப்பு கண்ணாடியை அடித்து சேதப்படுத்திய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதுடன் இதில் இருவரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த தனியார் சொகுசு பஸ்வண்டி மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு மட்டக்களப்பு பிள்;ளையாரடியிலுள்ள ஆலயத்தின் முன்னாள் நிறுத்தி தரிசித்துக் கொண்டிருந்தபோது அந்த பஸ்வண்டியின் முகப்பு கண்ணாடி மீது இருவர் கம்பினால் தாக்குதலை மேற்கொண்டனர் இதனால் கண்ணாடி உடைந்து சேதமடைந்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டநிலையில் இரு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்களுக்குள் ஏற்பட்டுவந்த பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது இச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.