இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவுடைய குழுவின் பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
´சோல்டா´ என்று அழைக்கப்பட்ட அசித ஹேமதிலக என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெலிவிட்ட, முல்லேரியவை பகுதியில் வைத்து நேற்றிரவு அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பொலிஸாரை நோக்கி கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்ட, கைக்குண்டு வீச முற்பட்ட காரணங்களினால் பல தாதாக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















