உலக மக்கள் அனைவரும் இடர் நீங்கி நலமோடு வாழ வேண்டி நாடளாவிய ரீதியில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில் விஷேட பூஜை வழிபாடு செய்ய பிரதமர் மஹிந்த வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த வகையிலே, நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களிலும், இந்த இடர்பாட்டிலிருந்து மக்கள் அனைவரும் விடுபட்டு நலமோடு வாழ, பிரார்த்தனைகள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாள்தோறும் இடம்பெற்றுவரும் இத் தருணத்தில் விசேடமாக இன்று மாலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விஷேட பிரார்த்தனையின் போது மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விசேட பிரார்த்தனைகளில் பங்குபற்றும் அரசியல் பிரமுகர்கள்
கொழும்பு புதிய கதிரேசன் ஆலயம் – டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர், கடற்றொழில்
யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் ஆலயம் – அங்கஜன் இராமநாதன், குழுக்களின் பிரதித் தலைவர்.
நுவரெலியா கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் சுவாமி ஆலயம் – மருதபாண்டி இராமேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்
வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயம் -குலசிங்கம் திலீபன் பாராளுமன்ற உறுப்பினர்