வீதியில் சென்றவரை வழிமறித்த பொலிசார் நாங்கள் நினைத்தால் வீதியில் வைத்து சுடுவோம் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டினர் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் வடமராட்சி உடுப்பிட்டியில் நடந்தது.
உடுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவரை, மோட்டார் சைக்கிளில் வந்த பொலிசார் வழிமறித்துள்ளனர்.
தன்னை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் தகாத வார்த்தைகளால் பேசிய பொலிசார், உடுப்பிட்டி சந்தியில் தாங்கள் மறித்தபோது நிற்காமல் சென்றதாக கூறி மிரட்டியுளள்னர்.
எனினும், அந்த இளைஞர் உடுப்பிட்டி சந்திக்கு செல்லவில்லை. அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் தான் வாங்கி தருகிறேன் என்றும், உடுப்பிட்டி சந்திக்கு செல்லவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
தேவையெனில் பேக்கரியில் அதைக் கேட்டு உறுதிப்படுத்தப்படுத்தும்படி அந்த அப்பாவி குறிப்பிட்டுள்ளார். எனினும் அதை காதில் வாங்காமல் பொலிசார் தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டனர்.
நாங்கள் நினைத்தால் வீதியில் வைத்து சுடுவோம் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், தகாத வார்த்தை பேசி பொலிசார் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட முயன்றனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பலர் வேடிக்கை பார்க்க அவரை பொலிசார் உடுப்பிட்டி சந்திக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கிருந்த பொலிஸ் அதிகாரி, மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றவர் இவரல்ல என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த அப்பாவியை பொலிசார் விடுவித்தனர்.
அங்கிருந்த பொலிஸ் அதிகாரி கையில் விக்கெட்டை வைத்திருந்தார் என அங்கிருந்தவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


















