வடக்கு மக்களிற்கு அரசியல் பிரச்சனை இப்போதில்லை. அபிவிருத்தியையே அவர்கள் கேட்கிறார்கள் என தெரிவித்துள்ளார் ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா.
தனியார் வானொலியொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மக்களிடம் நேரில் சென்று உங்களின் பிரச்சனை என்னவென கேட்டால், அவர்கள் தமக்கு அரசியல் பிரச்சனை இருப்பதாகவோ, சமஷ்டி தேவையென்றோ கூற மாட்டார்கள். நடைமுறை பிரச்சனைகள், அபிவிருத்தியையே கேட்பார்கள்.
காணாமல் போனவர்கள் விடயத்தில் பல சிக்கல்கள் உள்ளன. யாரால் காணாமல் போனார்கள், எப்போது காணாமல் போனவர்கள் என்பது தெரியாது. எனது சகோதரனும் காணாமல் போனார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாது.
தமிழ் தரப்புக்கள் எடுத்த தவறான நடவடிக்கைகளாலேயே யுத்தம் வந்து, காணாமல் போனவர்கள் பிரச்சனைகள் வந்தது என்றார்.