கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்திரஜோதி மாவத்தை பிரதேச வீடு ஒன்றில் இருந்தே நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
60 வயதுடைய திருமணமாகாத நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மர்மமாக உயிரிழந்த நபரின் மரணத்திற்கு இன்னமும் காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















