தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை இணைத்துக் கொண்டு கொழும்பு பொரள்ளையில் இருந்து ஆடம்பர பேருந்தில் கதிர்காமம் சென்ற நிலையில் மத்தள பகுதியில் வைத்துத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 49 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நான்கு பேர் கொரோனா தொற்றாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த குழுவினருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று கிடைத்துள்ளதுடன் அதில் இந்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொரள்ளை லெஸ்லி ரணகல மாவத்தை, சர்ப்பன்டையின் வீதி, மெகசீன் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவர் வழங்கிய பணத்தில் இந்த கதிர்காம பயணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாகவும் பேருந்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வாடகை வழங்கப்பட்டுள்ளது.
பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.