அமெரிக்காவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றின்போது நிகழ்ந்த ஒரு விபத்தைக் கண்ட சுமார் 4,000 பேர் பதறும் ஒரு திடுக் வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் Rhode Island என்ற இடத்தில், சர்க்கஸ் கூடாரம் ஒன்றில் கூடியிருந்த மக்கள், வாழ்வை விட பெரிய நிகழ்ச்சி இது என விளம்பரம் செய்யப்பட்டிருந்த ஒரு அரிய காட்சியைக் காண்பதற்காக ஆவலுடன் காத்திருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் எட்டு அழகிய இளம் மங்கைகள் தங்கள் தலை முடி மட்டுமே கொக்கிகளில் இணைக்கப்பட்டிருக்க, தலைமுடியின் பலத்தில், 20 அடி உயரத்தில் தொங்கியபடி பல மயிர்க்கூச்செறியும் செயல்களை செய்ய காத்திருந்தார்கள்.
திரை விலகியது, மக்கள் ஆனந்த ஆரவாரம் எழுப்பினார்கள், ஆனால், அடுத்த கணம், அவர்கள் தொங்கிக்கொண்டிருந்த கம்பியிலுள்ள கொக்கி உடைய, 4000 பேர், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், அத்தனை பேரின் கண்களுக்கு முன்னால், 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்கள் அந்த எட்டு பெண்களும். கீழே நின்றிருந்த பெண் ஒருவரும் சிக்கிக்கொண்டார்.
மக்கள் அதிர்ச்சியில் ஓலம் எழுப்ப,மருத்துவ உதவிக்குழுவினர் அந்த பெண்களை மீட்க ஓடினார்கள்.
இந்த சம்பவம் 2014ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதலான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
ஆம், அந்த பெண்களுக்கு தற்போது 52.5 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை நேற்று அவர்களது சட்டத்தரணி உறுதி செய்துள்ளார்.
அந்த விபத்து அவர்களது வாழ்வையே மாற்றிவிட்டதை மறுக்கமுடியாது என்றாலும், இனி அந்த பெண்கள் அந்த பணத்தை பயன்படுத்தி நல்ல சிகிச்சை செய்துகொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான Svitlana Balanchieva, (22) மற்றும் அவரது சக கலைஞரான Viktoria Medeiros ஆகிய இருவரும் கூறும்போது, நாங்கள் எப்போதுமே மற்றவர்களை, குறிப்பாக குழந்தைகளை மகிழ்விக்கவேண்டுமென்ற ஆசை கொண்டவர்கள்.
ஆனால் அது இனி முடியாது என்ற எண்ணம்தான் வேதனையை ஏற்படுத்துகிறது என்கிறார்கள்.