நியூசிலாந்தில் பிரித்தானிய சுற்றுலாப்பயணி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
குறித்த 28 வயது நபர் ஏற்கனவே இரண்டு பெண்கள் மீது பலாத்கார தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2018 டிசம்பர் மாதம் பிரித்தானிய சுற்றுலாப்பயணியான Grace Millane என்பவர் ஆக்லாந்தில் குற்றவாளி ஜெஸ்ஸி கெம்ப்சன் தங்கியிருந்த ஹொட்டல் அறையில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார்.
இருவரும் டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் கெம்ப்சன் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.
இதில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சுற்றுலாப்பயணி கொலை வழக்கில் கெம்ப்சன் 17 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான இன்னொரு வழக்கில் 11 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இதனால், மொத்தம் 28 ஆண்டுகள் கெம்ப்சன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பிரித்தானிய சுற்றுலாப்பயணி கொலை வழக்கில் கெம்ப்சனின் மேல்முறையீட்டை வெள்ளிக்கிழமை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தற்போது கெம்ப்சன் மீதான அனைத்து குற்ற வழக்கு விசாரணைகளும் முடிவுக்கு வந்த நிலையில், அவரது புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.