இத்தாலி நாட்டில் மக்கள், விலங்குகள் மற்றும் பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்க பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் தடையைப் புறக்கணித்து செய்த காரியம் பல உயிர்களை பலியாக்கியுள்ளது.
இத்தாலியின் தலைநகரான ரோமில், புத்தாண்டை கொண்டாடும் விதமாக மக்களால் பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது.
இதனால், நூற்றுக்கணக்கான பறவைகள் இருந்துள்ளன. ரோம் நகரின் சில தெருக்களில் சாலை முழுவதும் செத்து மடிந்து கிடைக்கும் பறவைகள் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பறவைகள் கொத்து கொத்தாக இறந்து கீழே விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.
https://twitter.com/animal_leaks/status/1345107336067751938
பறவைகள் இறந்ததற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் விலங்குகளை பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு, பறவைகளுக்கு மிக அருகில் பட்டாசுகள் வெடித்தால், அவை பயத்திலும் அதிர்ச்சியிலும் இறந்துள்ளதாக தெரிவித்தது.



















