டோனி எப்படி யாரால் இந்திய அணியின் கேப்டன் ஆனார் என்ற தகவலை முன்னாள் பிசிசிஐ தலைவர் சரத் பவார் பகிர்ந்துள்ளார்.
பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய சரத் பவார், 2007ல் டிராவிட் கேப்டன் பதவியில் இருந்து விலகி விரும்பிய போது அணியை வழிநடத்த புதிததாக ஒருவரை கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டது எப்படி என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
2007 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார். நானும் இங்கிலாந்து சென்றிருந்தேன்.
அப்போது என்னை சந்தித்த டிராவிட், கேப்டன் பொறுப்பால் தனது துடுப்பாட்டம் பாதிக்கிறது, கேப்டனாக தொடர விரும்பவில்லை, அப்பொறுப்பிலிருந்து விலகபோவதாக கூறினார்.
பின்னர் அணியை வழிநடத்துமாறு சச்சினிடம் கோரினேன், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இருவரும் (சச்சின்-டிராவிட்) அணியை வழிநடத்த விரும்பவில்லை என்றால், வேறு யார் வழிநடுத்துவார் என கேட்டேன்.
அணியை வழிநடத்த நாட்டில் மேலும் ஒரு வீரர் இருக்கிறார், அது வேறு யாரும் இல்லை டோனி தான் என சச்சின் என்னிடம் கூறினார்.
அதன் பின்னர் நாங்கள் டோனியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தோம் என சரத் பவார் கூறினார்.
சரத் பவார் பிசிசிஐ-யின் தலைவராக 2005-2008 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.