அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த உண்மையை புரிந்து கொண்டு அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் ஜனரஞ்சகம் குறைந்து போயுள்ளது. நாம் யதார்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்க வேண்டிய அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய மக்கள் ஆதரவுடன் தற்போது இருக்கின்றதா?.
எமக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது. மக்கள் மத்தியில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது.
இதனை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், நாம் முன்நோக்கி செல்லும் போது மேலும் கீழ் நோக்கி செல்ல நேரிடும்.
இப்படியான நிலைமையில் அடுத்த தேர்தலில் அரசாங்கம் எப்படி வெற்றி பெறும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எமக்கிடையில் ஐக்கியம் இல்லை என்றால், அடுத்த தேர்தல் இலகுவானதாக இருக்காது.
நாம் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்தால், அடுத்த தேர்தலில் எம்மால் வெற்றி பெற முடியாது. எமது அணியில் இருப்பவர்கள் இதனை மறந்து போயிருக்கும் விதத்தை பார்க்கும் மிகவும் கவலையாக இருக்கின்றது.
வியத் கம உறுப்பினர்களை எம்மவர்களே அதிகமாக விமர்சிக்கின்றனர். வியத் மக அமைப்பினரை விமர்சிப்பதானது மத்திய தர வகுப்பை சேர்ந்த தலைமுறையினரை விமர்சிக்கின்றோம் என்பதே பொருள்.
நடு நிலையாக வாக்காளர்களை இழந்து விட்டா நாம் அடுத்த தேர்தலை சந்திக்க போகின்றோம்? எனவும் நாலக கொடஹேவா கேள்வி எழுப்பியுள்ளார்.