இந்திய மாநிலம் கேரளாவில் பாடசாலை மாணவியான காதலியை 250 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பெற்றோரின் குற்றச்சாட்டுக்கு பொலிசார் பதிலளித்துள்ளனர்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மேலுகாவ் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அது கொலை அல்ல என்பதை உடற்கூராய்வின் அடிப்படையில் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
இளைஞரின் பெற்றோர் அது கொலை என சந்தேகம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையிலேயே உடற்கூராய்வின் அடிப்படையில் அது தற்கொலை என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள நாடுகாணி பள்ளத்தில் 17 வயது பாடசாலை மாணவி குற்றுயிராக பேச்சு மூச்சு இல்லாத நிலையிலும்,
23 வயதான அலெக்ஸ் மரக்கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் பொலிசாரால் மீட்கப்பட்டனர்.
வியாழக்கிழமை மாலை நேரம் முதல் இருவரை காணவில்லை என பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்த நிலையில்,
அலெக்ஸ் மற்றும் அந்த மாணவியும் நாடுகாணி பகுதிக்கு சென்றுள்ளனர். இருவரது பெற்றோரும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ஒன்றாக தற்கொலை செய்து கொள்ள அலெக்ஸ் கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவிக்கவே, ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே, அலெக்ஸ் ஆத்திரத்தில் தமது காதலியை பள்ளத்தில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 250 அடி பள்ளத்தில் குற்றுயிராக கிடந்தவரை அருகே சென்று பார்த்த அலெக்ஸ், அவர் இறந்துவிட்டதாக கருதி, அருகாமையில் உள்ள மரக்கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனிடையே படுகாயமடைந்த மாணவி, அடுத்த நாள் பகல் பொலிசார் மீட்கும் வரை அங்கேயே உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.
இந்த நிலையில், காதல் விவகாரம் காரணமாக தமது சகோதரரை கொன்றதாக அலெக்ஸின் சகோதரி பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.
ஆனால் உடற்கூராய்வில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் மாணவியின் வாக்குமூலம் கிடைத்தால் மட்டுமே, இந்த வழக்கில் இறுதியான முடிவை எட்ட முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.