பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள துறையை முறைகேடாக பயன்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருவாத்தோட்ட காவல் துறை விஜேராம பகுதியில் வைத்து அவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவர்களுக்கான இலட்சினையை பயன்படுத்தி வாகனங்களில் அவர்கள் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி காவல் துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரைக் கண்காணிப்பதற்காக ட்ரோன் இயந்திரங்களும் பயன்படுத்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.




















