சென்னை பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடத்தில் தவறான நடந்துகொண்ட நிலையில் அவரை கைது செய்துள்ள பொலிசார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளியின் முன்னாள் மாணவராக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ”PSBBன் பழைய மாணவராக மட்டுமல்லாமல், 2 இளம் சிறுமிகளின் தந்தையாகவும், இரண்டு இரவுகள் குழப்பமான மனநிலையில் இருந்தேன்.
ராஜகோபாலன் என்ற ஒரு பெயர் இன்று வெளிவந்திருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள இத்தகைய சம்பவங்களைத் தடுக்க, நாம் செயல்பட வேண்டும்.” என்று வேதனையை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ”ராஜகோபாலன் செய்த செயல் மனதை புண்படுத்தும் விதமாக இருக்கிறது. நான் அப்பள்ளியில் படித்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.
ஆனால், தற்போதைய சம்பவங்கள் என்னை மிகவும் வேதனை அடையச்செய்துள்ளன. இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”என்று வலியுத்தி இருக்கிறார்.
Been a couple of disturbing nights, not only as an old student of PSBB but also as a father of 2 young girls.
Rajagopalan is one name that’s come out today, but to stop such incidences all around us in the future, we need to act and need a complete overhaul of the system.
🙏🙏 pic.twitter.com/JRKZ3QOgeM— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) May 25, 2021




















