பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 14ஆயிரத்து 876பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 47இலட்சத்து 32ஆயிரத்து 434பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 100பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 87ஆயிரத்து 820பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 259பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 43இலட்சத்து 16ஆயிரத்து 514பேர் பூரண குணமடைந்துள்ளனர்.



















