மன்னாரில் சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில கிராங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக சாந்திபுரம், சௌத்பார், ஜிம்றோன் நகர் உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


















