நாட்டின் தென் பகுதியில் நிலவி வரும் தாழமுக்க நிலைமை காரணமாக இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வட, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகணங்களில் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.



















