யாழ். ஊர்காவற்துறை – களபூமி, பாலாவோடை பகுதியில் ஆணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (09.02.2023) பதிவாகியுள்ளது.
பாலாவோடை பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஆணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆண் உயிரிழப்பு
குறித்த நபரை காப்பாற்ற முயற்சி செய்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரண் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.