தேவையான பொருட்கள்
அன்னாச்சிப் பழத்துண்டுகள் – 1 கப்
பால் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலப்பொடி – 1/2
தேக்கரண்டி உப்பு – 1 சிட்டிகை
நெய் – 3/4 கப்
கேசரிப் பவுடர் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர் – 1/4 டம்ளர்
செய்முறை :
முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேக வைக்கவும். ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் வரும் வரை கிளற வேண்டும். இதில், அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும். அன்னாச்சிப்பழ ஜூஸ் எடுத்து தண்ணீருக்குப் பதில் ஜூஸை ஊற்றி, இதே முறையில் அல்வா தயார் செய்யலாம். இப்போது சூப்பரான அன்னாசி அல்வா ரெடி.