யாழ்.தென்மராட்சி பகுதியில் பாடசாலை மாணவியுடன் அங்க சேட்டை புரிந்த அயல் வீட்டு நபர் ஒருவரை சாவச்சேரிப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் இடம்பெற்றபோது தாய் கூலி வேலைக்காக வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் அயல் வீட்டு நபர் ஒருவர் சிறுமியுடன் சேட்டை விட்டமையை வீடு சென்ற தாயார் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சாவைச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிறுமியை வைத்தியப் பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் சாவாச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.