அரசாங்க வேலைகளை வழங்குவதாகக் கூறி , மக்களை ஏமாற்றி 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் பெற்ற ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கட்டிகல மற்றும் பந்தலங்கல பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.