ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினை ஜனநாயக ரீதியில் தீர்க்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக பிரச்சினை கலந்துரையாடலின் மூலம் தீர்க்கப்படும்.
கட்சி பொறிமுறை மற்றும் முற்போக்கான திட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அனைத்து பிரிவுகளின் ஆதரவோடு முன்னெடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.