தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி.
சமீபத்தில் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது.
மேலும் சமீபத்தில் கூட ஒரு கோடி சம்பளத்துடன் ஆடை விளம்பர வாய்ப்பு வந்துள்ளது. எனினும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் பெரியளவில் பணம் கிடைத்திருக்கும்.
அதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன். வீட்டிற்கு சென்றால் மூணு சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன்.
வேறு எந்த பெரிய தேவையும் எனக்கில்லை. இதனால் விளம்பரங்களில் நடிக்க வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.