என்ஜிகே படத்தை தொடர்ந்து இந்தியன்-2, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்ற ரகுல்பிரீத் சிங் இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். ரகுல்பிரீத்சிங் ஓரு அதி தீவிர அசைவ உணவு பிரியை ஆவார். அசைவத்தில் இருக்கும் அனைத்து விதமான அசைவ உணவுகளையும் அவர் ரசித்து உண்ணக்கூடியவர்.
இந்நிலையில், அவர் திடீரென முழு சைவத்திற்கு தான் மாறியிருப்பதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருக்கின்றார். இதுகுறித்து நடிகை ரகுல் ப்ரீத்சிங், “திடிரென்று தான் நான் சைவத்துக்கு மாறினேன். இந்த மாற்றத்திற்கு பிறகு எனக்குள் ஆற்றல் அதிகரித்திருப்பதாக நான் உணர்கிறேன்.
மேலும், மும்பையில் படப்பிடிப்பு நடக்கும் பொழுது நான் வீட்டில் இருந்தே பழங்களை எடுத்து செல்கின்றேன். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது கூட அரிசியுடன் காய்கறி, பருப்பை கலந்து சமைத்து கொடுக்கின்றனர். இருப்பினும், நான் அதில் சுவை அதிகம் வேண்டும் என்பதற்காக சைவ நெய்யை கலந்து சாப்பிடுகின்றேன் என்று கூறியுள்ளார்.
நடிகையின் இந்த திடீர் மாற்றம் அவரது நெருங்கிய நண்பர் வட்டாரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றதாம்.