• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

கொரோனா பரவலை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம்! நியூசிலாந்து……..

Editor by Editor
April 11, 2020
in உலகச் செய்திகள்
0
கொரோனா பரவலை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம்! நியூசிலாந்து……..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெறுவோம் என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டபோது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஜனவரி மாதம் இறுதி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் சீனாவின் வுகான் மாகாணத்தை புரட்டி எடுத்தது. பிப்ரவரி 2-வது வாரத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது.

இது ஒரு தொற்று நோய், சமூக விலகலால் (ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி இருப்பது) மட்டுமே இந்த வைரசின் செயின் பரவலை தகர்த்து எறிய முடியும் என சீனாவும், உலக சுகாதார மையமும் எச்சரித்தது.

அப்படி இருந்தும் எந்த நாடுகளும் அதை கண்டுகொள்ளவில்லை. அப்போதுதான் ஜனவரி கடைசி வாரத்தில் ஈரான், துபாய் போன்ற நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது.

இதனால் நியூசிலாந்து உஷார் ஆனது. அப்போது இருந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வந்தது.

அதாவது ஜனவரில் 22-ல் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை செய்ய ஆரம்பித்தது. ஆனால் அப்போது ஒருவருக்கும் கூட கொரோனா பாதிப்பு இல்லை. இருந்தாலும் பரிசோதனையை தொடர்ந்தது.

முதன்முதலாக பிப்ரவரி 26-ந்தேதி முதல் நபர் நியூசிலாந்து மண்ணில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் உஷாரான நியூசிலாந்து மார்ச் முதல் வாரத்தில் இருந்து தடுப்பு நடவடிக்கைகளில் கையாள தொடங்கியது.

முதலாவதாக மார்ச் 14-ந்தேதியில் இருந்து வெளிநாட்டில் இருந்து யார் நியூசிலாந்துக்கு வந்தாலும் 14 நாட்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என உத்தரவிட்டது. மேலும் சொகுசு கப்பல் ஒன்றையும் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது.

அத்துடன் மார்ச் 19-ந்தேதியில் இருந்து நாட்டில் எல்லையை மூடியது. இதனால் மார்ச் 18-ந்தேதி வரை வெளிநாட்டைச் சேர்ந்த 32 பேருக்குத்தான் கொரோனா இருந்தது.

அதன்பின் மின்னல் வேகத்தில் பரிசோதனை செய்ய ஆரம்பித்தது. மார்ச் 26-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஏப்ரல் 20-ந்தேதி வரை நியூசிலாந்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

கடந்த இரண்டு மூன்று வாரங்களின் கடுமையான நடவடிக்கையால் நேற்று வரை 992 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

கடுமையான கட்டுப்பாட்டால் கொரோனா வைரசின் செயின் பரவலை உடைத்து எறிந்து விட்டோம் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் கூறுகையில் நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆறு வாரங்களுக்குள் அதை முறியடித்துள்ளோம்.

கடந்த இரண்டு வாரங்களாக நியூசிலாந்து மக்கள் செய்தது மிகப்பெரியது என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

மனித ஆரோக்கியத்திற்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்தோம். நியூசிலாந்து மக்கள்தான் கொரோனா வைரசின் சமூக பரவலை தடுத்தனர். ஒவ்வொரு நபரும் இதைச் செய்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றதற்கு தேவைப்பட்டது நீங்கள் அமைதியாக இருந்ததுதான். தற்போது அதன்மூலம் உங்களது உயிரை காப்பாற்றியுள்ளீர்கள். தற்போது அந்த வகையில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும்.

ஏப்ரல் 22-ந்தேதிக்குப் பிறகு ஊரடங்கை தொடர்வதா? அல்லது ஊரடங்கை தளர்த்துவா? என்பது குறித்து ஏப்ரல் 20-ந்தேதி முடிவு செய்யப்படும்.

நியூசிலாந்தில் லெவல் 4 முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கூட்டம் இதை லெவல் 3-க்கு குறைக்கும். 3-ம் நிலை என்பது வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அரசு கட்டடங்கள், மிகப்பெரிய அளவில் மக்கள் கூடும் இடங்கள் மூடியே இருக்கும் என்றார்.

Previous Post

கொரோனாவின் தீவிர தாக்கம்: ஒருநாள் இறப்பு எண்ணிக்கையில் பிரிட்டனை முந்திச் சென்ற பிரான்ஸ்!

Next Post

கொரோனா நிதியை சுருட்டியதால் புங்குடுதீவு ஒன்றியத்திற்குள் வெடித்தது பூகம்பம்!!

Editor

Editor

Related Posts

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?
உலகச் செய்திகள்

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!
உலகச் செய்திகள்

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!
உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
Next Post
கொரோனா நிதியை சுருட்டியதால் புங்குடுதீவு ஒன்றியத்திற்குள் வெடித்தது பூகம்பம்!!

கொரோனா நிதியை சுருட்டியதால் புங்குடுதீவு ஒன்றியத்திற்குள் வெடித்தது பூகம்பம்!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

December 29, 2025
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

December 29, 2025
மகிந்தவின் திடீர் மாற்றம் – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

மகிந்தவின் திடீர் மாற்றம் – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

December 29, 2025
யாழ். தாளையடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

யாழ். தாளையடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

December 29, 2025

Recent News

இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

December 29, 2025
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

December 29, 2025
மகிந்தவின் திடீர் மாற்றம் – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

மகிந்தவின் திடீர் மாற்றம் – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

December 29, 2025
யாழ். தாளையடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

யாழ். தாளையடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

December 29, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy