இந்த உலகம் முழுவதும் கரோனா வைரஸின் பாதிப்பானது மிகவும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் மக்கள் பரிதாபமாக பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர்.
இந்த நிலையில், உலக பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. கரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவின் மீது உலக நாடுகள் மறைமுகமாக கோபத்தில் உள்ள நிலையில், ஜெர்மனிக்கு சீனா இழப்பீடு தரவேண்டும் என்று ஜெர்மனி அரசு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவால் 149 பில்லியன் யூரோக்கள் (162 பில்லியன் டாலர்) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெர்மனி கூறியுள்ளது. இந்த இழப்பிற்கான பட்டியலில் சுற்றுலா இழப்பீடாக 27 பில்லியன் யூரோ இழப்பீடு, திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்பிற்க்காக 7.2 பில்லியன் யூரோக்கள், விமானசேவை காரணமாக ஒரு பில்லியன் யூரோ மற்றும் சிறுதொழில் ஏற்பட்டுள்ள இழப்பிற்காக 50 பில்லியன் யூரோ வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீன வெளியுறத்துறை மந்திரி, இயற்கையாக பரவிய வைரஸிற்காக. சீனாவின் மீதான வெறுப்பின் காரணமாக ஜெர்மனி இவ்வாறு தெரிவித்துள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உலகம் முழுவதையும் பாதித்துள்ள ஒரு தொற்றுக்கு, இழப்பீடு கேட்பது மிகவும் மோசமானது என்றும் விமர்சனம் செய்துள்ளது.