ஈரானின் தெஹ்ரான் மாகாணத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதில் குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று ஈரானின் அவசர சேவை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் உள்ள டமாவண்ட் கவுண்டியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏழு கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்று ஈரானின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வால் 60 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 11 பேர் காயமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஈரானின் அவசர சேவை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தெஹ்ரானைத் தவிர, அல்போர்ஸ், கோம் மற்றும் காஸ்வின் மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
People are now waiting out on the streets across #Tehran, we advise all international people for possible aftershocks.0
#زلزله_تهران pic.twitter.com/vUjlISM1nY
— Living in Tehran (@LivinginTehran) May 7, 2020
5.1 நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்டு நிலநடுக்கங்களை பதிவு செய்திருப்பதை ஈரானின் தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியது, மேலும் அவற்றில் மிகப்பெரியது ரிக்டர் அளவில் 9.3 ஆக இருந்தது என குறிப்பிட்டுள்ளது.
தலைநகரில் உள்ள ஈரானியர்கள் அச்சத்துடன் வீதிகளில் குவிந்தனர். இதுவரை எந்தவிதமான உயிரிழப்பு மற்றும் சேதங்கள் ஏற்வடவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.