பெற்றோரின் அனுமதியின்றி பேரப்பிள்ளைகளின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய பெண்மணியை நீதிமன்றம் கடிந்துள்ளது.
நெதர்லாந்தில், சொந்த பேரப்பிள்ளைகளின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றியதால் பெண்மணி ஒருவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
மட்டுமின்றி, பெற்றோரின் அனுமதி இன்றி புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதால், உடனடியாக அந்த புகைப்படங்கள் நீக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக்கில் பேரப்பிள்ளைகளின் புகைப்படங்களை பதிவேற்றிய விவகாரத்தில் தனது மகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
தனது பிள்ளைகளின் புகைப்படத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்க தமது தாயாரிடம் பல முறை கோரியுள்ளார்.
அவர் மறுத்ததை அடுத்தே இறுதியில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, குறித்த பெண்மணி தமது பேரப்பிள்ளைகளின் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
தவறும் ஒவ்வொரு நாளும் 50 யூரோ பிழையாக செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் அவர் தமது பேரப்பிள்ளைகளின் புகைப்படங்களை உரிய அனுமதியின்றி பதிவேற்றினால் மேலும் 50 யூரோ பிழையாக செலுத்த நேரிடும்.
இதனிடையே, ட்வீட் அல்லது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யும் முன்பு அதிகம் யோசிக்காத பலரை இந்த தீர்ப்பு ஆச்சரியப்படுத்தும் என்று நான் நினைக்கிறேன் என்று தொழில்நுட்ப வழக்கறிஞர் நீல் பிரவுன் கூறியுள்ளார்.