கம்பஹா மினுவாங்கொட ஆடை தொழில்சாலை கொத்தணியில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த கொரோனா தொற்றாளர்களில் 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 50 பேரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய ஊடக சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்,
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
இதற்கமைய, மினுவாங்கொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1, 397ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளதாகத் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.