• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கட்டுக்குள் வராத கொரோனா!

Editor by Editor
November 15, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கட்டுக்குள் வராத கொரோனா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்று இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது. இன்னமும், அது சமூகத் தொற்றாக மாறவில்லை என்று அரசாங்கமும், சுகாதார அதிகாரிகளும் கூறிக் கொண்டிருந்தாலும், நாட்டின் பல இடங்களில் ஏற்கனவே அவ்வாறான நிலை தோன்றி விட்டதாக கூறியிருக்கிறது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்.

கொழும்பு வடக்கு, மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத வகையில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியிருப்பது அதிர்ச்சியான தகவல். தற்போது மேல் மாகாணத்துக்குள் தீவிரமடைந்துள்ள தொற்று அதனைக் கடந்து செல்லுமேயானால், நிலைமைகள் இன்னும் மோசமடையும்.

கொரோனா தொற்றின் முதலாவது அலையை வெற்றிகரமாக கையாண்ட அரசாங்கத்தினால் தற்போது அவ்வாறு செயற்பட முடியவில்லை. குழப்பமான முடிவுகளும், தவறான நடவடிக்கைகளும், இந்தமுறை தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கத்தில் பொதுமக்கள் தான், இதற்கு பொறுப்பு என்று கூறி குற்றம்சாட்டிய ஜனாதிபதி, பயங்கரவாதப் பிரச்சினை என்றால் நானே தீர்த்திருப்பேன், இதனை சுகாதாரத் துறையினர் தான் தீர்க்க வேண்டும் என்று மீண்டும் பந்தை தன்னிடம் இருந்து தட்டி விட்டுள்ளார்.

அது போதாதென்று, இப்போது அவர் பொதுமக்களுடன் ஊடகங்களும் பொறுப்பின்றி நடந்து கொண்டதால் தான், இந்தநிலை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுபோன்ற தருணங்களில், இவ்வாறான கருத்துக்கள் நிலைமையை மோசமாக்குமே தவிர, சிறப்பாக கையாளுவதற்கு உதவாது. ஆனால் அரசாங்கம் அதனைப் பற்றி கருத்தில் கொள்வதாக இல்லை.

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தைகடந்த 9ஆம் திகதிஅதிகாலை நீக்கிய கையுடன், பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. அதேவேளை, அடுத்த இரண்டு நாட்களிலேயே மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. மேல் மாகாணத்தில் உள்ள தொற்று ஏனைய பகுதிகளுக்கு பரவுவதை தடுக்கவே, இந்த நடவடிக்கை என்பதுதெளிவாகத் தெரிகிறது. அவ்வாறாயின், 9ஆம் திகதி அனைத்து போக்குவரத்துக்களையும்மீள ஆரம்பிக்க அரசாங்கத்தினால் ஏன் அனுமதி கொடுக்கப்பட்டது?

மேல் மாகாணத்தில் தொற்று மிகத் தீவிரமாக பரவியிருக்கிறது என்பதை, நாளாந்த தொற்று நிலைமை அறிக்கையை பார்க்கின்ற எவராலும், இலகுவாக ஊகிக்க முடிகிறது. எனினும் அரசாங்கம் ஏன் இதனை சரியாக பகுப்பாய்வு செய்யத் தவறியது என்ற குழப்பம் இன்னமும் காணப்படுகிறது. தினமும் வெளியிடப்படுகின்ற தொற்றாளர் எண்ணிக்கையையும், மரணமடைவோரின் எண்ணிக்கையையும் வைத்து மாத்திரம்- உண்மையான நிலையை தீர்மானிக்க முடியாது.

தொற்று மற்றும் மரணம் குறித்து அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிபரங்கள் தவறு என்றும், உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டுகிறது. இவ்வாறான சந்தேகம் பொதுமக்களுக்கும் உள்ளது. அதேவேளை, அரசாங்கம் வெளியிடுகின்ற எண்ணிக்கைகள் கூட உண்மையான தொற்றாளர்களின் எண்ணிக்கை அல்ல. தினமும் கண்டுபிடிக்கப்படுகின்ற தொற்றாளர்களின் எண்ணிக்கையைத் தான் அரசாங்கம் வெளியிடுகிறதே தவிர, சமூகத்தில்உள்ள புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அல்ல.

அதனை எவராலும் கண்டுபிடிக்கவும் முடியாது. அத்தகைய வசதி உலகில் எங்கும் இருக்கவும் வாய்ப்பில்லை. பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் தான் இப்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையாக வகைப்படுத்தப்படுகிறார்கள். சமூகத்தில் கண்டுபிடிக்கப்படாத தொற்றாளர்கள் இதனை விடவும் அதிகமாக இருக்கக் கூடும். இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா நோய்க்கான எந்த அறிகுறிகளும் இருக்கவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அறிகுறிகள் இருந்தால் தான் எவரேனும், பரிசோதனைக்கு செல்வார்கள். நோய்க்கான அறிகுறி இல்லாதவர்கள் தொடர்ந்து சமூகத்தில் இயங்கிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்கள் நோய்க் காவிகளாகவும் இருப்பார்கள். இதுதான் ஆபத்தான நிலை. அறிகுறிகளுடன் நோயை வெளிப்படுத்துபவர்களுக்கு, சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். அறிகுறியற்றவர்களை கண்டுபிடிப்பதே கடினம்.

தொற்றாளருடன் தொடர்பில் இருப்பவர்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிகிறது. கொழும்பில் அண்மையில் நடத்தப்பட்ட எழுமாற்றான பரிசோதனையில் 5 சதவீதமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே, கொழும்பில் நடமாடித் திரியும் ஆறு இலட்சம் பேரில் 30ஆயிரம் பேருக்கு தொற்று இருக்கலாம் என்றும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறார் கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி.

இந்தக் கணிப்பு ஒரு எடுகோளின் அடிப்படையிலானது தான். இதில் 50 வீதம் சரியாக இருந்தால் கூட, 15 ஆயிரம் தொற்றாளர்கள் நடமாடிக் கொண்டிருப்பார்கள். இது மோசமான சுகாதார நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அறிகுறியாகவே இருக்கிறது. இவற்றுக்கு அப்பால், கொரோனா தொற்று மரணங்கள் இப்போது வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் நான்கு, ஐந்து பேர் உயிரிழப்பது இப்போது சாதாரணமாக மாறி விட்டது,

இவ்வாறு உயிரிழப்பவர்கள் பெரும்பாலானவர்கள், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். இதுவரை உயிரிழந்தவர்களில் 93 வீதமானோர் தொற்றா நோயினால்தான் உயிரிழந்தனர் என்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கூட, இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

தொற்றா நோயினால் இறந்தவர்களை அமெரிக்க மருத்துவர்கள் கொரோனா மரணங்களுக்குள் சேர்த்துக் கொள்வதால் தான், அமெரிக்கா கொரோனாஇறப்பில்முதலிடத்தில் இருப்பதாகவும், ஜேர்மனி போன்ற நாடுகள் அவ்வாறு சேர்ப்பதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் போது அவர்களுக்கு கூடிய விரைவில் மரணம் நிகழ்கிறது. பலவீனமானவர்கள் தான் கொரோனாவின் பிரதான இலக்கு. அண்மையில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக மாத்திரம் இருக்கவில்லை.

பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே உயிரிழந்திருக்கிறா்கள். தொற்று கண்டறியப்படாமல் வீடுகளிலேயே மரணத்தை சந்தித்திருக்கிறார்கள். தொற்றா நோயாளிகள் கொரோனாவை அறிய முன்னரே மரணத்தைதழுவும் சுகாதார நெருக்கடி தோன்றியிருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கு முன்னரே மரணமடைகின்ற இந்த நிலையானது, தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதில் உள்ள நெருக்கடியை வெளிப்படுத்துகிறது.

சமூகத்துக்குள் ஊடுருவியுள்ள தொற்றைக் கண்டறிவதற்கு அதிகளவில் பி.சி.ஆர் சோதனை நடத்த வேண்டும் என்று, அரசாங்கமருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் சில மாதங்களுக்கு முன்னரே, ஆலோசனை கூறப்பட்டது. அப்போது அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. அதற்கு பரிசோதனைக்கு ஏற்படும் அதிக செலவினமும் ஒருகாரணம் தான். நாளொன்றுக்கு 60 மில்லியன் ரூபா, பி.சி.ஆர்சோதனைகளுக்காக செலவிடப்படுவதாக அண்மையில் அரசாங்கம் கூறியிருக்கிறது.

இப்போது நிலைமை கையை மீறிச் சென்ற பின்னர், தான் பி.சி.ஆர்.பரிசோதனைகளை அதிகரிக்க முனைகிறது அரசாங்கம். அதேவேளை, அரசாங்கம் கொரோனா தொற்று தொடர்பான முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறது.

சுகாதார நிலையும், பொருளாதார நிலையும் அரசாங்கத்தின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது. இவ்வாறானநிலையில், சமூகத் தொற்றாக மாறிக் கொண்டிருக்கும் கொரோனாவை, இனிக் கட்டுப்படுத்துவது இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதை தான் இப்போதைய நிலைமைகள் உணர்த்தியிருக்கின்றன.

Previous Post

குருவிட்ட சிறைச்சாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Next Post

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் திடீர் மரணம்!

Editor

Editor

Related Posts

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்
இலங்கைச் செய்திகள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்
இலங்கைச் செய்திகள்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
இலங்கைச் செய்திகள்

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி
இலங்கைச் செய்திகள்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

December 20, 2025
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
Next Post
பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் திடீர் மரணம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் திடீர் மரணம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025

Recent News

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy