நம்முடைய உணவில் தற்பொழுது இடம்பெற்று வரும் ஒரு முக்கிய உணவு பதார்த்தம் பன்னீர். இன்று பன்னீரை நம்முடைய வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பால் – 2 லிட்டர்
எலுமிச்சை பழம் – 2
செய்முறை
எலுமிச்சையை விதை இல்லாமல் பிழிந்து சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
சிறிது நேரம் கலக்கும் பொழுது பால் சிறு சிறு துண்டுகளாக பிரிந்து வரும். வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுது காட்டன் துணியில் பாலை வடிகட்டுங்கள். துணியை சுருட்டி நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு துணி மூட்டையை ஒரு தட்டில் வைத்து ஏதாவது கனமான பொருளை அதன் மேல் வைத்து ஒரு 3 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.
3 மணி நேரம் கழித்து எடுத்துப்பார்த்தால் உங்களுக்கு தேவையான பன்னீர் அழகாக ரெடி ஆகி இருக்கும்.
உங்கள் தேவைக்கு துண்டுகளாக போட்டு வைத்து கொள்ளுங்கள்.