2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அபுதாபியில் இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இதனிடையே, டுபாயில் நேற்று நடைபெற்ற, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி 41 ஓட்டங்களினால் ஐக்கிய அரபு இராச்சிய அணியை வெற்றி கொண்டது.
இந்தப் போட்டியில், முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி, 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.




















