நம் வீட்டு சமையல் அறையில் முக்கியமாக இடம் பெற்றுள்ள ஒரு அற்புத பொருள் தான் இஞ்சி.
இதில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.
இது கை மருத்துவத்தில் பல நோய்களை தீர்க்க பெரிதும் உதவி புரிகின்றது.
அந்தவகையில் செரிமானத்தை தூண்டி பசியின்மையை போக்கும் அற்புத ருசியான வறுத்த இஞ்சி குழம்பு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – 200 கிராம்
தேங்காய் – அரை மூடி
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
பூண்டு 5 பற்கள்
மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்
வெந்தயத் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கொத்து
வத்தல் மிளகாய் – 3
உப்பு – தேவைக்கு
செய்முறை
முதலில் தேங்காயை துருவி வைத்து கொள்ளுங்கள். இஞ்சியை நன்றாக தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய இஞ்சி மற்றும் தேங்காயை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வறுக்கும் பொழுது எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.
வறுத்த தேங்காய் மற்றும் இஞ்சி சூடு ஆறியதும் அதனுடன் புளி, பூண்டு, மிளகாய் பொடி, மல்லி தூள், சீரகம், வெந்தய தூள் சேர்த்து நன்றாக மை போல அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வத்தல் மிளகாயை போட்டு லேசாக கிளறி அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுது மசாலா கலவையை வாணலியில் சேர்த்து கூடவே சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தேவைக்கு உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இந்த குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது குழம்பை இறக்கி விடவும்.
இஞ்சியை வறுத்து அரைத்து எடுப்பதால் கொதித்தவுடன் இஞ்சி குழம்பு கொதித்தவுடன் ரெடி ஆகி விடும்.
இந்த இஞ்சி குழம்பு வறுத்து செய்வதால் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும். மேலும் பசி எடுக்காமல் இருப்பவர்கள் இந்த இஞ்சி குழம்பு சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.